சினிமாவை காதலித்த நாட்களில்....03
நான் கவரிமான் பரம்பரையோ இல்லையோ எனக்கு தெரியாது....ஆனால் என்னால் வீட்டுக்கும் ஊருக்கும் இழுக்கு வரக்கூடாது. செத்துமடிந்துவிட வேண்டும்...
இப்படித்தான் இரவு முழுவதும் ஜட்டியோடு கம்பிக்கூண்டுக்குள் நினைவுகள் கழிந்தது.
அதேநேரம், எந்த கவலையுமில்லாமல் டிரைவரும்,சாரதியும் துண்டுபீடிக்காக,எச்சில் துப்பியிருந்த சிமெண்ட் தரையில் தேடிக்கொண்டு இருந்தனர்.
கடவுளே...ஏன் இவர்களோடு பழக்கம் ஏற்படுத்தினாய்? பசியால் வாடினாலும்,நான் நேசித்த இந்த சினிமா கிடைக்காமல் போனாலும்,அவமானங்கள் வராமல் வாழ்ந்தாலே போதுமடா சாமி....
கொசுக்கடியிலும்,வாழ்க்கை பயத்தாலும் வெறித்துப்பார்த்தபடி உட்கார்ந்திருந்த எனக்கு, காக்கை கரையும் சத்தமும் குருவிகளின் கீச்சிடும் சத்தமும் கேட்க தொடங்கியது.
ஆமாம்...விடிந்துகொண்டிருந்தது.......
எனக்கும்தான்....!
எங்கிருந்தோ வந்தான் ஒரு மகராசன். ஜீன்ஸ்பேண்ட்டும்,வெள்ளைநிற ரவுண்ட்நெக் பனியனுமாய் காட்சியளித்தான்.
இந்த டிரைவருக்கு தூரத்து சொந்தம் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.
யாரோ ஒரு புண்ணியவான் பார்த்துவிட்டுபோய்' உன் மச்சான் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறாரு...'என சேதி சொல்லியிருக்கிறார்கள். காலையிலேயே வந்துவிட்டார்.
கடவுள் உண்டா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு சக்தி இருக்கிறது. இல்லையென்றால்..எதுவும் அறியாது சிக்கலில் மாட்டிக்கொண்ட எனக்கு ஒரு விடிவு கிடைக்க வழி நடக்குமா...?
"என்னய்யா,பண்ணினான் இவன்...? இவன் பொண்டாட்டிய..., பெத்தவளே எரிச்சான்னுதான்யா(டிரைவரின் மாமியார்) நாங்க கேஸ் குடுத்திருக்கோம்...,
பொண்டாட்டிய பறிகொடுத்தவன், தான் பெத்த குழந்தையை பார்க்க வரக்கூடாதா..? உடனே கடத்திகிட்டு போகவந்துட்டான்னு அவ உங்ககிட்டே கேஸ் கொடுத்தா.. (டிரைவரின் மாமியார்) நீங்க பணத்த வாங்கிட்டு அவ பக்கமே வாசிப்பீங்களா..?'
'இந்தா பணம்...அவங்கள வெளிய விடுங்க...' என இரண்டு கட்டு நோட்டுகளை போலீஸ்காரங்க டேபிளில் போட்டார் அந்த மகராசன்.
'சார்...ஐயா வரட்டும்...பேசிக்கலாம்..,' என ஒரு போலீஸ்காரன் சொல்ல,
'ஐயாவ நான் பாத்துக்கிறேன்...,முதல்ல இவங்கள வெளியில விடுங்க...'என தைரியமாக பேசி எங்களை விடுவித்ததும் எவ்வளவு நிம்மதியான ஒரு பெருமூச்சுவிட்டுக்கொண்டேன் தெரியுமா...? அந்த நிம்மதி....நான் அனுபவித்த சுதந்திரம்.
வெளியே வந்து கையெடுத்து கும்பிட்டேன். அந்த அறிமுகமில்லாத நண்பருக்கு.
அவர் ஒரு பெண் அமைச்சருக்கு பர்சனல் அசிஸ்டண்ட் என்று சொன்னார்கள்.
அப்படி ஒருத்தர் வராமலிருந்திருந்தால் என் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் திசைமாறியிருக்கலாம்.
இன்று வருடங்கள் பல ஓடிவிட்டது.....
ஆனால்,என்னவோ இந்த சம்பவம் மட்டும் இன்னும் மறக்கமுடியாமல்தான் இந்த நெஞ்சுகூட்டில் கிடந்து தவிக்கிறது....
மீண்டும் அடுத்து ஒரு சம்பவத்தில்.......
-தொடரும்-



1 கருத்துகள்:
இதுபோல் நிறைய சம்பவங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது....
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு